சும்மா இருக்க தம்மால் முடியவில்லை; ஆகவே தெய்வத்தின் துணையை நாடுகிறார் தாயுமானவர்.
"சொல்லால் முழக்கிலோ சுகம் இல்லை; மெளனியாய்ச்
சும்மா இருக்க அருளாய்!
சுத்தநிர்க்குணமான பரதெய்வமே பரம்
ஜோதியே சுகவா¡¢யே!"
சும்மா இருப்பது எவ்வளவு கடினம் தொ¢யுமா?
அதனையும் தாயுமானவரே பட்டியல் போட்டுத்தருகிறார், பாருங்கள்.
"கந்து உக மதக்கா¢யை வசமா நடத்தலாம்;
கரடி,வெம்புலி வாயையும்
கட்டலாம்; ஒரு சிங்கம் முதுகின்மேல் கொள்ளலாம்;
கட்செவி எடுத்து ஆட்டலாம்;
வெந்தழலின் இரதம் வைத்து ஐந்துலோகத்தையும்
வேதித்து விற்று உண்ணலாம்;
வேறொருவர் காணாமல் உலகத்து உலாவலாம்;
விண்ணவரை ஏவல் கொள்ளலாம்;
சந்ததமும் இளமையோடு இருக்கலாம்; மற்று ஒரு
சா£ரத்திலும் புகுதலாம்;
ஜலம்மேல் நடக்கலாம்; கனல்மேல் இருக்கலாம்;
தன்னிகா¢ல் சித்தி பெறலாம்;
சிந்தையை அடக்கியே "சும்மா" இருக்கின்ற
திறம் அ¡¢து! சத்து ஆகி என்
சித்தமிசை குடி கொண்ட அறிவு ஆன தெய்வமே!
தேஜோ மய ஆனந்தமே!
- தாயுமானவர்
மதயானையை அடக்கிவிடலாம்; கரடி, புலி வாயைக்கட்டலாம்; சிங்கத்தின் மீது சவா¡¢ செய்யலாம்; பாம்பை எடுத்து ஆட்டலாம்; இரசவாதம் என்னும் வித்தையால் உலோகங்களைப் பொன்னாக மாற்றி வாழ்க்கை நடத்தலாம்; மாயமாக மறைந்து புலனாகாமல் தி¡¢யலாம்; தேவர்களையும் அடிமைப்படுத்தலாம்; காயகல்பம் செய்து இளமையோடு இருக்கலாம்; கூடுவிட்டுக்கூடு பாய்ந்து வேறொரு உடலுக்குள் புகுந்து கொள்ளலாம்; ஜலஸ்தம்பனம் செய்து நீர்மேல் நடக்கலாம்; அக்கினி ஸ்தம்பனவித்தை புகுந்து நெருப்பின்மேல் இருக்கலாம்; ஒப்பில்லாத சித்திகள் பெற்றுவிடலாம்.
ஆனால், சிந்தையை அடக்கி சும்மா இருப்பது இருக்கிறதே!
அப்பப்பா! அது நம்மால் ஆகாதப்பா!
ஆளை விடு.
Tuesday, December 21, 2010
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment