படித்ததில் பிடித்தது. (அப்படி உங்களுக்கு வாஸ்துவில் நம்பிக்கை இருந்தால் .......)
வாஸ்து ஸ்லோகம் இதோ
இந்தக் காலத்தில் பலர் அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடுகள் வாங்குகின்றனர். அதில் ஒரு பாதியில் சரியான வாஸ்து அமைய, மறு பாதி அதாவது, கிழக்கு ஒரு பக்கம் இருந்தால் மறு பகுதி மேற்கு பக்கம் இருக்கும். இதில் நிச்சயமாக எதாவது ஒரு ரூம் வாஸ்து பிரகாரம் அமையாது. என்ன செய்வது? சொந்த வீடாக பூமியுடன் இருந்தால் பிரச்சனை இல்லை. நாமே இஷ்டப்படி இடித்துக் கட்டலாம். ஆனால் பிளாட் (flat)இல் இது எப்படி சாத்தியமாகும்?இது போல் அமைவதும் அதனால் மன வேதனை அடைவதும் நம் பிறந்த நேரமும் அதனால் கணிக்கப்பட்ட ஜாதகமும் தான் காரணம். நிச்சயமாக வீடு பாக்கியத்தில் ஏதாவது இடத்தில் கேடு செய்யும் கிரகம் இருக்கலாம் (malific planet) லக்னத்திலிருந்து நாலாவது இடம், வீட்டைக் குறிக்கும். இதற்குப் பூமிகாரகன் செவ்வாய். அதற்கு அதிபதி முருகன். ஆகையால் செவ்வாய்க்கு பிரீதியாக முருகனுக்கு அபிஷேகம் செய்யலாம். அல்லது முருகனது ஸ்லோகங்கள் படிக்கலாம்.இதைத் தவிர வாஸ்து சரி செய்யும் ஸ்லோகமும் இருக்கிறது. ஒரு அன்பர் இதை என்னிடம் கேட்டிருந்தார். எல்லோருக்கும் பயன்படட்டுமே என்று அதை எழுதுகிறேன். இதைப் படிக்கும் போது ஊதுவத்தி ஏற்றி, வீட்டில் நாலு முக்கிலும் காட்ட வேண்டும். எல்லாவற்றுகும் மேலாக நம்பிக்கையும் சிரத்தையும் வேண்டும். இந்த ஸ்லோகத்தில் வேதத்தில் வருவது போல் மேலும் கீழும் ஒலி எழுப்பிப் படித்தால் நல்லது. என் உடல் நிலை சரியானதும் அதைச் சொல்லி அனுப்பி வைக்கிறேன்.இதைச் சாதாரணமாகவும் படித்து ஒப்பித்துக்கொள்ளுங்கள். தினமும் காலையில் குளித்தபின் இதைச் செய்ய வேண்டும். ஒருவர் வீடு பாதியில் நின்றது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பிரச்சனை. சில நாட்கள் ஆட்கள் வரமாட்டார்கள். சிலசமயம் சிமென்ட் மூட்டை கிடைக்காது. இப்படி பல மாதங்கள் இழுத்து அடித்தது. பின் நான் இந்த வாஸ்து ஸ்லோகத்தைக் கொடுத்தேன். அவர் தினமும் நாலு பக்கமும் சாம்பிராணி காட்டி வேண்டிக்கொண்டார். அவர் நம்பிக்கை வீண் போகவில்லை. உடனே ஆட்கள் வர, இரண்டு மாதங்களில் மளமளவென்று முடிந்துவிட்டது.அது என் நல்ல நேரமோ அல்லது அவரது நம்பிக்கையோ இல்லை ஸ்லோகத்தின் சக்தியோ! மூன்றும் சேர்ந்து இருக்கலாம்.
வாஸ்து ஸ்லோகம்
வாஸ்தோஷ்பதே ப்ரதி ஜாநீஹ்யஸ்மான் ஸ்வாவேஸோ அனமீவோ பவான" (bavana:)யத்வேமஹே ப்ரதிதன்னோ ஜுஷஸ்வஸ்ரந்த ஏதி த்விபதே ஸ்ஞ்சதுஷ்பதேவாஸ்தோஷ்பதே சக்ம்யா ஸ்கும் ஸதாதே ஸக்ஷீம ஹிரண்வயா காது மத்யாஆவஹக்ஷேம உதயோகே வரன்னோ பாத ஸ்வஸ்தி பிஸ்ஸதான:வாஸ்தோஷ்பதே ப்ரதரணோன ஏதி கோபி ரஸ்வே பிரிந்தோஅஜராஸஸ்தே ஸகயேஸ்யாம பிதேவ புத்ரான பிரதி நோ ஜுஷஸ்வஅமீவஹா வாஸ்தோஷ்பதே விஸ்வா ரூபாண்யா விசன் ஸகாஸுஸேவ ஏதின:சிவகு(gu)ம் சிவம் சுபகும் சுபம்!(Source: sify.com)
Friday, August 28, 2009
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment