Wednesday, February 23, 2011

அள்ளி அள்ளி கொடுத்த போதும் ....../நன்னெறி பாடல்

அள்ளி அள்ளி கொடுத்த போதும் குறைவில்லாதது ......
கள்ளருக்கும் காவலர்க்கும் இனிமையானது ......
உள்ளம் என்பதுள்ளவர்க்கு உண்மையானது .....
உலகம் என்பதுள்ளவரை உறுதியானது .....

அன்பு என்பதே தெய்வமானது
அன்பு என்பதே இன்பமானது

மதத்தின் மீது வைத்த அன்பு பக்தி ஆனது
மனிதன் மீது வைத்த அன்பு பாசமானது
இதயம் மீது வைத்த அன்பு உண்மையானது
ஏழை மீது வைத்த அன்பு கருணையானது (அன்பு என்பதே )

அறிவில்லாத மனிதர் உள்ளம் அருள்ளிலாதது
அருள்ளில்லாத மனிதர் உள்ளம் பணிவில்லாதது
பணிவில்லாத மனிதர் உள்ளம் பண்பில்லாதது
பண்பில்லாத மனிதர் உள்ளம் அன்பில்லாதது (அன்பு என்பதே )

பொன் படைத்த மனிதர் கோடி நகைகள் வாங்கலாம்
பூமி வீடு காடு மேடு கரைகள் வாங்கலாம்
அன்பு என்னும் பொருளை எந்த உலகில் வாங்கலாம் ?
நல்ல அன்னை தந்தை பிள்ளை வாழும் மனையில் வாங்கலாம் (அன்பு என்பதே)

No comments:

Post a Comment